சன.13,2014. இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவையொட்டி, தன் ஞாயிறு மூவேளை செப உரையிலும்
திருமுழுக்கின் முக்கியத்துவம் குறித்தே எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையில்
19 புதிய கர்தினால்களின் பெயர்களையும் அறிவித்தார். திருப்பீடச்செயலர் பேராயர் Pietro
Parolin உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த 19 திருஅவை அதிகாரிகள், இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை
செப உரைக்குப்பின் திருத்தந்தையால் கர்தினால்கள் என அறிவிக்கப்பட்டனர். திருப்பீடச்செயலர்,
உலக ஆயர் மாமன்றத்தின் பொதுச்செயலர் பேராயர் Lorenzo Baldisseri, விசுவாசக்கோட்பாட்டுப்
பேராயத்தின் தலைவர் பேராயர் Gerhard Ludwig Műller, குருக்களுக்கான திருப்பேராயத் தலைவர்
பேராயர் Beniamino Stella, பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் Vincent Nichols, நிக்கராகுவாவின்
மனகுவா பேராயர் Leopoldo José Brenes Solórzano, கானடா பேராயர் Gérald Cyprien Lacroix,
ஐவரிகோஸ்ட் பேராயர் Jean-Pierre Kutwa, Brazil பேராயர் Orani João Tempesta, இத்தாலியின்
பெருஜியா பேராயர் Gualtiero Bassetti, அர்ஜென்டினாவின் Buenos Aires பேராயர் Mario Aurelio
Poli, கொரியா பேராயர் Andrew Yeom Soo jung, Chile பேராயர் Ricardo Ezzati Andrello,
Burkina Faso பேராயர் Philippe Nakellentuba Ouédraogo, பிலிப்பீன்ஸ் பேராயர் Orlando
B. Quevedo, Haïti ஆயர் Chibly Langlois, மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் பேராயர்கள் Loris
Francesco Capovilla, Fernando Sebastián Aguilar, Kelvin Edward Felix ஆகியோர் கர்தினால்களாக
அறிவிக்கப்பட்டு, அடுத்தமாதம் 22ம் தேதி வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில்
இடம்பெறும் திருப்பலியில் திருத்தந்தையால் கர்தினால்களாக உயர்த்தப்படுவர்.