2014-01-13 16:50:46

கடவுள் நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார் – திருத்தந்தையின் Twitter செய்தி


சன.13,2014. "கடவுள் நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார்; 'என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற அட்டையை நம் மனக்கதவில் மாட்டியுள்ளோமா? என சிந்திப்போம்" என்ற தன் Twitter செய்தியை இத்திங்களன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாளில், திருப்பீடச் செயலகமும் தன் Twitter பக்கத்தில், இத்திங்கள் திருத்தந்தையைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கவந்த திருப்பீடத்திற்கான பல நாடுகளின் அரசுத் தூதர்களின் குழுவுக்குத் தன் நன்றியை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.