2014-01-13 16:56:58

இலங்கையில் 3 ஆலயங்கள் மீது தாக்குதல்


சன.13,2014. இலங்கையின் தென்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று ஆலயங்கள் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன.
எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாவிடினும் ஆலயம் ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தெற்கே ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று ஆலயங்கள் மீதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குறைந்தபட்சம் 200 பேர் கொண்ட கும்பல் 20க்கும் அதிகமான பௌத்த மதகுருமார் தலைமையில் தமது வழிபாட்டின் போது வந்து, இரு ஆலயங்களை அடுத்தடுத்து தாக்கியதாக அந்த ஆலயங்களின் போதகர்கள் கூறியுள்ளனர்.
ஜன்னல்கள், இசைக்கருவிகள் மற்றும் ஏனைய பொருட்களை அவர்கள் அடித்து நொறுக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகருக்கு அருகில் உள்ள இன்னுமொரு ஆலயத்துக்கும் இரவில் ''தீ'' வைக்கப்பட்டதாகவும், ஆனாலும் ''தீ'' பெரிதாகப் பரவுவதற்கு முன்னதாக அது அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கூறுகின்றது.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.