திருத்தந்தை பிரான்சிஸ் : நம் குடும்பங்களில் எந்த ஒரு முதியோரும் நிராகரிக்கப்பட்டவர்போல்
இருக்கக் கூடாது
சன.11,2014. நம் குடும்பங்களில் எந்த ஒரு முதியோரும் நிராகரிக்கப்பட்டவர்போல் இருக்கக்
கூடாது; முதியவர்கள் நம் சமூகத்தின் சொத்து என்று இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள Twitter
செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், நம் ஆண்டவரின் திருமுழுக்கு
விழாவாகிய இஞ்ஞாயிறன்று வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு
அருளடையாளத்தை வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
திருமுழுக்கு வழங்கவிருக்கும் குழந்தைகளில், பெரும்பாலான குழந்தைகள் வத்திக்கான் பணியாளர்களின்
பிள்ளைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும், தான் கருத்தாங்கியிருந்த குழந்தையை கருக்கலைப்பு
செய்ய விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்த ஒரு
பெண்ணின் மகனுக்கும் இஞ்ஞாயிறன்று இவ்வருளடையாளத்தை வழங்கவுள்ளார் திருத்தந்தை என மேலும்
அறிவிக்கப்பட்டுள்ளது..