அன்னை தெரேசாவை மையப்படுத்திய ஓர் இசை நாடகம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அரங்கேறும்
சன.08,2014. அன்னை தெரேசாவை மையப்படுத்திய ஓர் இசை நாடகம், இந்தியாவின் கொல்கத்தா, பூனே,
பெங்களூரு போன்ற பல்வேறு நகரங்களில் 100 முறைக்கு மேல் அரங்கேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனதைத்
தொடும் ஓர் அற்பத நாடகம் இது என்று, இந்த இசை நாடகத்தை பார்த்த ஹைதராபாத் உயர் மறைமாவட்டப்
பேராயர் தும்மா பாலா அவர்கள் கூறினார். ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள அம்ருதவாணி கலைத்தொடர்பு
மையம் தயாரித்து வழங்கும் இந்த இசை நாடகம், அன்னை தெரேசா அவர்களின் வாழ்வை இளமை முதல்
காட்டுகிறது என்றும், இந்த இசை நாடகத்தில் ஆந்திராவின் பல்வேறு ஊடகக் கலைஞர்கள் நடித்துள்ளனர்
என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இரண்டு மணி நேரங்கள் நீடிக்கும் இந்த
இசை நாடகம், 23 காட்சிகளைக் கொண்டதென்றும் இதில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேடையிலும்,
30க்கும் மேற்பட்டோர் திரைக்குப் பின்னரும் உழைக்கின்றனர் என்றும் இந்நாடகத்தை இயக்கும்
அருள் பணியாளர் Balashowry அவர்கள் கூறினார்.