சன.04,2014. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஓர் இந்துமதக் கோவிலில் விவிலியம் வழிபடப்படும்
தனிப்பட்ட மரபு இருந்து வருகின்றது என ஆங்கில நாளிதழ் ஒன்று கூறியுள்ளது. Dharwad
மாவட்டத்தின் Navalgund நகரிலுல்ள Ajata Nagalingaswami கோவில் குருக்கள் அங்குள்ள விவிலியப்
பிரதிக்கு மலர்கள் சூடி ஆரத்தி எடுத்து எண்ணெய் விளக்குகளை ஏற்றுகின்றனர் என, The Hindu
நாளிதழ் கூறியுள்ளது. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த யோகி நாகலிங்கசாமி இக்கோவிலில் முக்கிய
தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறார். இவருக்கும் இந்த விவிலியப் பிரதிக்கும் தொடர்பு உள்ளதாகக்
கூறப்பட்டுள்ளது. ஒருமுறை Kallappa என்ற பக்தரை யோகி நாகலிங்கசாமி சந்தித்தபோது, சில
காரணங்களுக்காக Kallappa தன்னிடமிருந்த விவிலியத்தை இந்த யோகியிடமிருந்து மறைத்துள்ளார்.
இவ்விருவரும் உரையாடிக்கொண்டிருக்கும்போது யோகி எப்படியோ அந்த விவிலியத்தை Kallappaவிடமிருந்து
வாங்கி அதில் ஒரு துளை போட்டு, அதில் ஒரு வெள்ளி நாணயத்தை வைக்க அது மறுபுறமாக வெளியே
வந்துவிட்டது. இந்தத் துளை தானாக மறையும்போது தான் மீண்டும் மறுபிறவி எடுப்பதாக யோகி
கூறினார் என்று சொல்லப்படுகிறது.