திருத்தந்தை பிரான்சிஸ்: குழந்தை இயேசு, கடவுளின் அளவிடமுடியாத கனிவான அன்பின் வெளிப்பாடு
சன.03,2014. நம் ஒவ்வொருவரையும் சூழ்ந்துள்ள கடவுளின் அளவிடமுடியாத கனிவான அன்பை குழந்தை
இயேசு வெளிப்படுத்துகிறார் என்று, தனது டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த மார்ச் 13ம்
தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கடந்த 9 மாதங்களில் அவர் நிகழ்த்திய
மூவேளை செப உரைகள் மற்றும் அல்லேலூயா வாழ்த்தொலி உரைகளில் 27 இலட்சத்துக்கு மேற்பட்ட
மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என திருப்பீடம் அறிவித்துள்ளது. வத்திக்கான் தூய பேதுரு
வளாகம் மற்றும் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் நிகழ்த்திய திருவழிபாடுகளில் ஏறக்குறைய 23 இலட்சம் பேரும், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் புதன் பொது மறைபோதகங்களில் ஏறக்குறைய 15 இலட்சம் பேரும் கலந்து கொண்டுள்ளனர்
எனவும் திருப்பீடம் அறிவித்துள்ளது.