சன.03,2014. ஆப்ரிக்காவில் அமைதியும் ஒப்புரவும் நல்லிணக்கமும் ஏற்படும் நோக்கத்தில்
சனவரி 5, வருகிற ஞாயிறை ஆப்ரிக்க தினமாகக் கடைப்பிடிக்கவுள்ளது பெல்ஜியத் தலத்திருஅவை. பெரிய
ஏரிகள் பகுதியிலுள்ள அனைத்து ஆப்ரிக்க நாடுகள், குறிப்பாக, புருண்டி, காங்கோ குடியரசு,
ருவாண்டா ஆகிய நாடுகளுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், திருக்காட்சிப்
பெருவிழாவுக்குமுன்வரும் ஞாயிறை ஆப்ரிக்க தினமாகக் கடைப்பிடிக்கின்றது பெல்ஜியத் தலத்திருஅவை. அன்றைய
நாளில் திருப்பலியில் எடுக்கப்படும் உண்டியல், பெரிய ஏரிகள் பகுதியிலுள்ள ஆப்ரிக்க நாடுகளின்
முன்னேற்றத்துக்காக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும்
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 6 பேருக்கு ஒருவர் வீதம் புலம் பெயர்ந்துள்ளனர் என ஐ.நா.
கூறியுள்ளது.