2014-01-03 15:20:32

2014ம் ஆண்டு அமைதியின் ஆண்டாக விளங்கட்டும், பாகிஸ்தான் சமயத் தலைவர்கள்


சன.03,2014. 2014ம் ஆண்டு, அமைதியும் ஒப்புரவும் நிறைந்த ஆண்டாக, பாகிஸ்தானுக்கு அமைய வேண்டும் என்ற தங்கள் ஆவலை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டின் சமயத் தலைவர்கள்.
லாகூரில் நடைபெற்ற பல்சமயக் கூட்டமொன்றில் இந்த ஆவலை வெளிப்படுத்தினர் அந்நாட்டின் கிறிஸ்தவ மற்றும் பிற சமயத் தலைவர்கள்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய லாகூர் பேராயர் செபஸ்தியான் பிரான்சிஸ் ஷா அவர்கள், உரையாடலின் வல்லமை, சமயங்கள் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்தி, அச்சத்தையும் சந்தேகத்தையும் அகற்றும் எனக் கூறினார்.
பாகிஸ்தான் பூமி உரையாடலுக்கு மிகவும் வளமையாக இருக்கின்றது என்றும், ஒன்றிணைந்து வாழ்வதற்கு நம்பிக்கையும் சக்தியும் கொடுக்கும் கருணைநிறைந்த கடவுளில் நம்பிக்கை வைப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் பேராயர் ஷா.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.