நேர்காணல் – 2014ம் ஆண்டை சிறப்புற வாழ சில பரிந்துரைகள்
சன.02,2014. அன்பர்களே, மலர்ந்திருக்கும் 2014ம் ஆண்டை சிறப்புற வாழ்வதெப்படி என அருள்பணி
ஜெரி ரொசாரியோ சே.ச அவர்களைத் தொலைபேசியில் கேட்டோம். வழக்கறிஞராகிய இவர், 155 தடவைகளுக்கும்
மேல் இரத்த தானம் செய்து 500க்கும் மேற்பட்ட இரத்த தான முகாம்களை நடத்தியிருப்பவர். உறுப்புதானங்களை
ஊக்குவித்து வருபவர். சென்னை இயேசு சபையினரின் தியான ஆசிரம இல்லத்தின் தலைவராகப் பணியாற்றும்
அருள்பணி ஜெரி ரொசாரியோ, பல தமிழ், ஆங்கில நூல்களை எழுதியிருப்பவர். 30 நாடுகளில் சொற்பொழிவாற்றியிருக்கும்
இவர், 45 நிறுவனங்களில் பல தலைப்புக்களில் அவ்வப்போது உரையாற்றி வருகிறார்.