2014-01-02 15:49:17

சனவரி 3 காலையில் உரோம் Gesu ஆலயத்தில் திருத்தந்தை திருப்பலி


சன.02,2014. சனவரி 3, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற Gesu ஆலயத்தில் இயேசு சபை சகோதரர்களுடனும் உடன் உழைப்பவர்களுடனும் இணைந்து கூட்டுத் திருப்பலியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வெள்ளியன்று கொண்டாடப்படும் புனிதம் மிகுந்த இயேசுவின் பெயர் என்ற திருவிழாவன்று, திருத்தந்தை ஆற்றும் இத்திருப்பலி, முத்திப்பேறுபெற்ற Peter Faber அவர்கள் அண்மையில் புனிதராக உயர்த்தப்பட்டதற்கு நன்றித் திருப்பலியாகவும் கொண்டாடப்படுகிறது.
சனவரி 3, இவ்வெள்ளி காலை 9 மணிக்குத் துவங்கும் இத்திருப்பலியை வத்திக்கான் தொலைக்காட்சி நிலையம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்திய நேரம் பிற்பகல் 1.20 முதல் ஆரம்பமாகும் இந்த நேரடி ஒளிபரப்பு, ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும்.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித மார்த்தா இல்லத்தில் ஆற்றும் திருப்பலியில் இந்தச் சனவரி மாதத்திலிருந்து உரோம் நகரைச் சார்ந்த பங்கு மக்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் சார்பில் உரோமைய ஆயராகப் பணியாற்றும் கர்தினால் Agostino Vallini அவர்கள் இந்த ஏற்பாடுகள் குறித்து உரோம் நகரில் உள்ள பங்குகளுக்கு அறிவிப்புக்கள் அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : JESCCOM / VIS








All the contents on this site are copyrighted ©.