ஜப்பானில் "எல்லைகள் அற்ற முனிவர்கள்" என்ற பெயரில் உருவாகியுள்ள மக்கள் பணி அமைப்பு
டிச.23,2013."எல்லைகள் அற்ற முனிவர்கள்" என்ற பெயரில் ஜப்பானில் உள்ள புத்தத் துறவிகள்
ஒரு மக்கள் பணி அமைப்பை உருவாக்கியுள்ளனர். Hiroaki Nakajima, Eryo Sugiwaka என்ற
இரு புத்தத் துறவிகளால் துவக்கப்பட்டுள்ள இவ்வமைப்பு, உலகெங்கும் வாடும் வறியோரை மையப்படுத்தி,
நாடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, பணியாற்ற முனைந்துள்ளது. 'எல்லைகள் அற்ற மருத்துவர்கள்',
'எல்லைகள் அற்ற பத்திரிக்கையாளர்கள்' என்ற அமைப்பினர் உலகின் பல நாடுகளிலும் மனித சமுதாயத்திற்குப்
பணியாற்றுவதுபோல, 'எல்லைகள் அற்ற முனிவர்கள்' என்ற இவ்வமைப்பும் பணியாற்றும் என்று கருதப்படுகிறது. தங்கள்
பணியில் ஏனைய மதத்தவரையும் இணைத்துச் செயலாற்றப் போவதாக இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.