2013-12-19 17:26:34

கிறிஸ்மஸ் விழாவையொட்டி, மெக்சிகோ ஆயர்கள் சிறைகளில் உள்ளவர்களுக்கு, திருப்பலியாற்ற திட்டம்


டிச.19,2013. மெக்சிகோ நாட்டின் கர்தினால் Norberto Rivera Carrera அவர்கள், டிசம்பர் 18, இப்புதனன்று மெக்சிகோ நகரில் அமைந்துள்ள வளர் இளம் பருவத்தினர் சிறையில் கிறிஸ்மஸ் சிறப்புத் திருப்பலியை நிகழ்த்தினார்.
கடந்த 18 ஆண்டுகளாக கிறிஸ்மஸ் விழா காலத்தில் சிறைகளுக்குச் சென்று திருப்பலியாற்றும் கர்தினால் Carrera அவர்களைப் போலவே மெக்சிகோவின் பல ஆயர்கள் சிறைகளில் உள்ளவர்களுக்கு, கிறிஸ்மஸ் விழாவையொட்டி, திருப்பலியாற்ற திட்டமிட்டுள்ளனர் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மெக்சிகோ நாட்டில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் Christophe Pierre அவர்கள், Femenil Tepepan என்ற சிறையில் உள்ள இளம் கைதிகளுக்கு டிசம்பர் 20, இவ்வெள்ளியன்று திருப்பலியாற்றி, அவர்களுக்குக் கம்பளிப் போர்வைகளைக் கிறிஸ்மஸ் பரிசாக அளிப்பார் என்றும் CNA செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.