பிலிப்பின்ஸ் நாட்டின் சூறாவளியில் சிக்கிய பகுதியில் பள்ளிகளை மீண்டும் கட்டியெழுப்பும்
பணியில் UNICEF
டிச.18,2013. எவ்வளவுதான் புள்ளிவிவரங்கள் வெளிவந்தாலும், பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய
சூறாவளியின் அழிவை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நவம்பர்
8ம் தேதி Haiyan சூறாவளியால் தாக்கப்பட்ட பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் மீட்புப்
பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF நிறுவனத்தின் இயக்குனர்
Anthony Lake அவர்கள், மீட்புப் பணியின் சவால்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். 6,000க்கும்
அதிகமான மக்களின் உயிரைப் பலிகொண்ட இந்தச் சூறாவளியால், 1 கோடியே 40 இலட்சத்திற்கும்
அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், குறிப்பாக, 60 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் Anthony Lake அவர்கள் கூறினார். இப்புகுதியில் பாதிக்கப்பட்டுள்ள
அனைத்து பள்ளிகளையும் மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் UNICEF தீவிரமாக இயங்கி வருவதாகவும்,
இதற்கிடையே, குழந்தைகள் படிப்பதற்கு கூடாரங்களில் பள்ளிகளை அமைத்து வருவதாகவும் ஐ.நா.
அதிகாரி Anthony Lake தெரிவித்தார். மேலும், சூறாவளியால் பாதிக்கப்பட்ட 55,000 ஹெக்டேர்
நிலப்பரப்பில் டிசம்பர் சனவரி மாதங்களில் மீண்டும் நெல் பயிரிடும் முயற்சிகளில் ஐ.நா.வின்
உணவு, வேளாண்மை நிறுவனமான FAO ஈடுபட்டுள்ளது என்று ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.