2013-12-17 16:02:15

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகரிப்பு, ஐ.நா. எச்சரிக்கை


டிச.17,2013. கடந்த பல ஆண்டுகளில் மனிதர்களுக்குத் தொற்றியுள்ள புதிய நோய்களுள் ஏறக்குறைய 70 விழுக்காடு விலங்குகளிடமிருந்து பரவியுள்ளன என, FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது.
உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்கு வெகு எளிதாக நோய்கள் தொற்றுகின்றன என்று எச்சரித்துள்ள FAO நிறுவனத்தின் உதவிப் பொது இயக்குனர் Ren Wang, வனப்பகுதிகளில் விளைநிலங்களை அமைப்பதும், வீட்டு விலங்குகளின் பெருக்கமும் அதிகரித்து வருவது இதற்குக் காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
காடுகளுக்கும் வீட்டு விலங்குகளுக்கும் இடையே அதிகத் தொடர்பு இருப்பதாகவும், மனிதர்களாகிய நாம் முந்தையக் காலங்களைவிட தற்போது விலங்குகளுடன் அதிகத் தொடர்பை வைத்துள்ளோம் எனவும் கூறினார் Ren Wang.
1940களிலிருந்து மனிதருக்குத் தொற்றியுள்ள பெரும்பாலான நோய்கள் காட்டு விலங்குகளிடமிருந்து பரவியுள்ளன எனக் கூறப்படுகின்றது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.