2013-12-17 16:00:54

நெல்சன் மண்டேலாவைப்போல் மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய விழுமியங்களில் இலங்கை மக்கள் வளர வேண்டும் – பலசமயத் தலைவர்கள்


டிச.17,2013. தென்னாப்ரிக்கக் காந்தி என்றழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்களின் எடுத்தக்காட்டான வாழ்வில் காணப்பட்ட மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய விழுமியங்களில் இலங்கை மக்கள் வளர வேண்டுமென, பலசமயக் கூட்டம் ஒன்றில் கூறப்பட்டது.
மறைந்த நெல்சன் மண்டேலா அவர்களுக்கு, நினைவஞ்சலி கூட்டம் நடத்திய இலங்கையின் கத்தோலிக்க, கிறிஸ்தவ, புத்த, இந்து மதங்களின் பிரதிநிதிகள், மண்டேலா அவர்கள் வாழ்வில் கடைபிடித்த விழுமியங்களைக் கடைபிடிக்குமாறு இலங்கை மக்களைக் கேட்டுக்கொண்டனர்.
மேலும், தென்னாப்ரிக்காவில் இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு தினத்தன்று, வெண்கலத்திலான மண்டேலாவின் மிகப் பிரம்மாண்டமான உருவச்சிலை, Pretoria வில் திறந்துவைக்கப்பட்டுள்ளது

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.