கர்தினால் Carles Gordó அவர்களின் இறப்புக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தந்தி
டிச.17,2013. இஸ்பெயின் நாட்டு பார்செலோனாவின் முன்னாள் பேராயர் கர்தினால் Ricardo María
Carles Gordó அவர்களின் இறப்பையொட்டி இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். பார்செலோனா பேராயர் கர்தினால் Lluis Martinez Siatach அவர்களுக்குத் திருத்தந்தை
அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், கர்தினால் Carles Gordó அவர்கள், தலத்திருஅவைக்கும்,
அகிலத் திருஅவைக்கும் ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டியுள்ளதோடு, அவரின் ஆன்மா நிறைசாந்தியடையத்
தான் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இச்செவ்வாய் காலையில் மரணமடைந்த 87 வயதாகும்
கர்தினால் Carles Gordó, 1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை இஸ்பெயின் ஆயர் பேரவையின்
தலைவராகப் பணியாற்றியவர். கர்தினால் Ricardo María Carles Gordó அவர்களின் இறப்போடு
திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 199 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும்
தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆகவும் மாறியுள்ளன.