எழுத்தறிவின்மை தெற்கு ஆசியாவுக்குப் பெரும் பிரச்சனை
டிச.17,2013. உலகில் எழுத்தறிவற்ற மக்கள்தொகையில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான எண்ணிக்கையைக்
கொண்டுள்ள தெற்கு ஆசியாவில், எழுத்தறிவின்மை பெரும் பிரச்சனையாக உள்ளது என, பாகிஸ்தான்
மற்றும் நேபாள அமைச்சர்கள் கூறியுள்ளனர். Rotary South Asia Literacy Summit 2013
என்ற தலைப்பில் புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தான் கல்வி அமைச்சர்
Nisar Ahmed Khuhro, எழுத்தறிவின்மை வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பதாகக் கூறினார். மேலும்,
இக்கருத்தரங்கில் பேசிய நேபாள கல்வி அமைச்சர் Madhav Poudel, உலகில் பிற பகுதிகளைவிட
தெற்கு ஆசியாவில் எழுத்தறிவின்மை அதிகமாக இருப்பதாகவும், பல நாடுகளில் பாலின இடைவெளி
தொடர்ந்து காணப்படுவதாகவும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு முயற்சிகள் அவசியம் எனவும் கூறினார். தெற்கு
ஆசியாவில் 2017ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்ற புதிய முயற்சி இக்கருத்தரங்கின்
இறுதியில் தொடங்கப்பட்டது.