2013-12-16 16:05:59

"வீடற்ற இயேசு" என்ற வடிவம், உரோம் நகரில் ஒரு முக்கியமான இடத்தில் நிரந்தரமாக வைக்கப்படலாம்


டிச.16,2013. "வீடற்ற இயேசு" என்ற கருத்துடன் அமைந்திருந்த இயேசுவின் உருவத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொட்டபோது, உலகெங்கும் வீடற்று இருக்கும் மக்கள் அனைவரையும் அவர் தொட்டதுபோல் நான் உணர்ந்தேன் என்று சிற்பக்கலைஞர் Timothy Schmalz அவர்கள் கூறினார்.
கனடாவின் Toronto நகரைச் சார்ந்த Schmalz என்ற சிற்பக் கலைஞர், "வீடற்ற இயேசு" என்ற பொருள்படும் உருவத்தை வடித்து, அதனை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்திற்கு சென்ற மாத இறுதியில் கொணர்ந்தார்.
தெருவோரம் அமைந்துள்ள ஒரு பெஞ்சில் படுத்திருப்பது போன்ற இவ்வடிவத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் பொது மறைப்போதகத்தின் இறுதியில் ஆசீர்வதித்தபோது, அந்த உருவத்தின் கால்களைத் தொட்டு ஒரு நிமிடம் செபித்தார்.
"வீடற்ற இயேசு" என்ற இந்த வடிவம், உரோம் நகரில் ஒரு முக்கியமான இடத்தில் நிரந்தரமாக வைக்கப்படலாம் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.