2013-12-16 16:05:20

கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, இலங்கை ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள சுற்றுமடல்


டிச.16,2013. இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்களைக் குறித்த உண்மைகள் வெளியிடப்பட வேண்டும்; தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து நாட்டின் அமைதியை உறுதி செய்யவேண்டும் என்ற விண்ணப்பங்கள் அடங்கிய ஒரு மடலை இலங்கை ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ளது.
"ஒப்புரவை நோக்கியும், நாட்டை கட்டியெழுப்பவும்" என்ற தலைப்பில், கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, இலங்கை ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள இந்தச் சுற்றுமடல் இலங்கை அரசை மட்டும் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மடல் அல்ல, மாறாக, இலங்கை வாழ் அனைத்து மக்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்ட மடல் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும், இன்னும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாமல் இருப்பது குறித்து ஆயர்கள் தங்கள் கவலையை இம்மடலில் வெளியிட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போரில் காணமல் போனவர்களைப் பற்றிய உண்மைகள் வெளியிடப்படவேண்டும் என்றும், பல்வேறு வடிவங்களில் தொடர்ந்துவரும் சித்திரவதைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஆயர்களின் இம்மடல் வலியுறுத்துகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.