உலகத் தலைவர்கள் அனைவருக்கும் மண்டேலா அவர்கள் சிறந்ததோர் முன் உதாரணமாகத் திகழ்கிறார்
- கர்தினால் Napier
டிச.11,2013. நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவைக் குறித்து கேள்விப்பட்டதும், அவர் தென்
ஆப்ரிக்காவிற்கு ஆற்றிய பணிக்கென நன்றியுணர்வே தன் மனதில் மேலெழுந்தது என்று Durban பேராயர்
கர்தினால் Wilfrid Fox Napier கூறினார். தன் பணிவுள்ள மனதால் சூழ இருந்தோர் அனைவரையும்
மதிப்புடன் நடத்திய தலைவர் மண்டேலா அவர்கள், உலகத் தலைவர்கள் அனைவருக்கும் சிறந்ததோர்
முன் உதாரணமாகத் திகழ்கிறார் என்று கர்தினால் Napier அவர்கள் 'La Croix' என்ற நாளிதழுக்கு
அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இனவெறி கொள்கைகளை எதிர்த்துப் போராடிய மண்டேலா
அவர்களின் நினைவாக, டிசம்பர் 11, இப்புதனன்று தென் ஆப்ரிக்காவில் உள்ள அனைத்து கோவில்களிலும்
மதியம் 12 மணிக்கு மணிகள் ஒலிக்கப்படும் என்று தென் ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.