2013-12-09 16:38:15

திருத்தந்தை, காங்கோ குடியரசுத்தலைவர் சந்திப்பு


டிச.,09,2013. காங்கோ குடியரசுத் தலைவர் Denis Sassou N’Guesso இத்திங்கள் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப் பின்னர் திருப்பீடச் செயலர் பேராயர் பியெத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார் காங்கோ அரசுத்தலைவர்.
காங்கோ குடியரசில் கத்தோலிக்க திருஅவை ஆற்றிவரும் பணிகள், குறிப்பாக கல்வித்துறையில் ஆற்றிவரும் பணிகள் குறித்து இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
மத்திய ஆப்ரிக்காவில் இடம்பெறும் மனிதாபிமான உதவிகள், குறிப்பாக அகதிகளிடையே ஆற்றப்பட்டுவரும் பணிகள், அடிப்படைவாதக் குழுக்களின் வளர்ச்சி போன்றவை குறித்தும் அரசுத்தலைவர் N’Guessoக்கும் திருப்பீட அதிகாரிகளுக்கும் இடையேயான சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.