டிச.,09,2013. இந்தியாவின் Balasore மறைமாவட்டத்தின் புதிய ஆயராக Gopalpur அக்குவினாஸ்
கல்லூரியின் அதிபரும் பேராசிரியருமான அருட்தந்தை சைமன் கைபுரம் அவர்களை நியமித்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். Balasore மறைமாவட்டத்தின் ஆயராக இதுநாள்வரை பணியாற்றிவந்த
ஆயர் தாமஸ் திருத்தலிலின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, புதிய ஆயராக கைபுரம் அவர்களை
அறிவித்துள்ளார். கேரளாவின் கோட்டயம் மறைமாவட்டத்தில் உள்ள தண்ணீர்முக்கம் எனுமிடத்தில்
1954ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் கைபுரம் அவர்கள், புனித வின்சென்ட் தெ பால் மறைப்பணி
சபையில் இணைந்து 1980ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் கிரகோரியன்
பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ள அருள்பணி சைமன் கைபுரம், பெர்ஹாம்பூர்
மறைமாவட்டத்திலுள்ள அக்குவினாஸ் கல்லூரியின் அதிபராகவும் பேராசிரியராகவும் இந்நாள்வரை
பணியாற்றிவந்தார்.