மும்பைச் சேரிகளில் வாழும் ஏழைகளின் தேவைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம், கர்தினால்
கிரேசியஸ்
டிச.05,2013. மும்பையின் புறநகர்ப்பகுதிச் சேரிகளில் வாழும் ஏழைகளின் தேவைகள் குறித்த
விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என அழைப்புவிடுத்தார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு
கிரேசியஸ். ஆசியாவின் மிகப்பெரிய சேரி என அழைக்கப்படும் மும்பையின் தாராவி பகுதிக்கு
மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட கர்தினால் கிரேசியஸ், பசிக்கும் நோய்களுக்கும் எதிரான
விழிப்புணர்வுகள் இத்திருவருகைக்காலத்தில் தீவிரமாகத் துவக்கப்பட வேண்டுமென்றார். ஏழை
மக்களின் தேவை குறித்த விழிப்புணர்வு இயக்கத்தைத் தாராவியில் துவக்கிவைத்த கர்தினால்
கிரேசியஸ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பாப்பிறைப்பணியை, பொருளாதார நீதி, சரிநிகர்தன்மை
மற்றும் உலக அமைதிக்கென அர்ப்பணித்துள்ளதை நினைவூட்டினார். வாழ்வுக்கான போராட்டம்-நகரப்புற
ஏழைகளுக்கு நம்பிக்கையைக் கொணர்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கத்தை மும்பையில்
இத்திருவருகைக்காலத்தையொட்டி துவக்கிவைத்துள்ளார் கர்தினால் கிரேசியஸ்.