திருத்தந்தை பிரான்சிஸ் : புனிதத்துவம் என்பது அசாதாரண செயல்களை ஆற்றுவதில் இல்லை
டிச.05,2013. புனிதத்துவம் என்பது அசாதாரண செயல்களை ஆற்றுவதில் இல்லை, மாறாக, சாதாரண
செயல்களையும் அன்புடனும் விசுவாசத்துடனும் ஆற்றுவதில் உள்ளது என, இவ்வியாழனன்று, தனது
டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். புனிதர்களாக வாழ்வது
அனைவராலும் இயலக்கூடிய ஒன்றே என்பதை வலியுறுத்த விரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ், அன்பிலும்
விசுவாசத்திலும் அதைப் பெற முடியும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.