திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் இயேசுவுடன் நண்பர்களாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்
டிச.03,2013. நாம் இயேசுவுடன் நண்பர்களாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். ஆண்டவரால்
அன்புகூரப்பட உங்களைக் கையளிப்பதற்கு அஞ்சவேண்டாம் என்று இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில்
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், வெப்பநிலை மாற்றம், நீதி சார்ந்த விவகாரம்,
இந்நிலையை அகற்றுவதற்கு, மனித மாண்பை அடிப்படையாகக்கொண்ட, ஒழுக்கநெறி அணுகுமுறையோடு இணைந்த
தொழில்நுட்ப அறிவு அவசியம் என்ற, பேராயர் செலஸ்தீனோ மிலியோரேயின் கூற்றை, தனது @terzaloggia
டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது திருப்பீடச் செயலகம். பேராயர் மிலியோரே, 2010ம்
ஆண்டு ஜூலையில் போலந்து நாட்டுக்கானத் திருப்பீடத் தூதராக, முன்னாள் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்களால் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்னர் ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின்
நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றினார்.