2013-12-02 16:54:32

வடமாகாண முதல்வர் - மன்னார் ஆயர் சந்திப்பு


டிச.02,2013. இலங்கையில் வடமாகாண சபை பதவியேற்றபின் முதல்முறையாக முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று ஞாயிறன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் நிலப்பிரச்சனைகள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களின் நிலம் பெருமளவில் இராணுவ தேவைக்காகக் கையகப்படுத்தப்படுவதனால், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற முடியாமல் இடர்களைச் சந்திப்பதாக இச்சந்திப்பின்போது, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பி.பி.சி. இணையப்பக்கம் தெரிவிக்கிறது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.