2013-12-02 16:54:57

ஓராண்டில் 2,500 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு


டிச.02,2013. தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குமுன், எச்.ஐ.வி. நோய்க் கிருமிகள் தாக்காத, பூஜ்ய நிலையை எட்ட, தமிழக அரசு எடுத்துவரும் பலகட்ட முயற்சிகளுக்கு, அனைத்துத் தரப்பினரின் முழு ஒத்துழைப்பு அவசியம் என, தமிழக நலவாழ்வுத் துறை செயலர் இராதாகிருஷ்ணன் விண்ணப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 1 இலட்சத்து 32 ஆயிரம்பேர், எச்.ஐ.வி.,யுடன் வாழ்ந்து வருகின்றனர் எனவும், 1 இலட்சத்து 4 ஆயிரம் பேருக்கு, இலவச கூட்டு மருந்து சிகிச்சை நடந்து வருவதாகவும், 2007ம் ஆண்டில், 0.38 விழுக்காடாக இருந்த தொற்று, தற்போது, 0.28 விழுக்காடாகக் குறைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டில், 2,500 பேருக்கு இந்நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதற்கிடையே, இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், எய்ட்ஸ் நோயின் தாக்கங்களும் அதிகரித்து வருவதாக நலவாழ்வுச் சேவைகள் துறையின் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.