2013-11-29 15:19:08

பொருளாதார ஏமாற்றத்தால் துன்புறும் மக்களின் எண்ணிக்கை உலகில் அதிகரிப்பு


நவ.29,2013. பொருளாதாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்காததால் ஏற்படும் ஏமாற்றத்தால் துன்புறும் மக்களின் எண்ணிக்கை உலகில் கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
பொருளாதாரத்தில் எதிர்கொண்ட ஏமாற்றத்தால் 2012ம் ஆண்டில் உலகில் வயதுவந்தவர்களில் ஏழு பேருக்கு ஒருவர் வீதம் துன்புற்றுள்ளனர் எனவும், இந்நிலை தெற்கு ஆசியாவில் 24 விழுக்காடாகவும், பால்கன் பகுதியில் 21 விழுக்காடாகவும், அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் அதிகம் இருந்ததாகவும்
Gallup நடத்திய புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான Gallup நடத்திய ஆய்வில், இந்தியாவில் இவ்வாறு துன்புறும் மக்களின் எண்ணிக்கை, 2006க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தைவிட, 2010க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு மடங்குக்கு அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : IANS







All the contents on this site are copyrighted ©.