2013-11-28 15:44:40

திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவார்த்தைக்கு திறந்தமனம் கொண்டவர்களாக இருப்பதற்கு முயற்சிப்போம்


நவ.28,2013. இறைவன் நம்மிடம் பேசும்போது அவரின் வார்த்தைக்கும், அவரின் வியப்புகளுக்கும் திறந்தமனம் கொண்டவர்களாக இருப்பதற்கு முயற்சிப்போம் என இவ்வியாழக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தினமும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில் டுவிட்டரில் குறுஞ்செய்திகளை எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், இறையன்பு, இறைவனின் கருணை குறித்து அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.
மேலும், Antilles தீவு நாடுகளுக்கு இவ்வெள்ளி முதல் வருகிற டிசம்பர் 4ம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.