2013-11-27 16:10:29

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள், ஆன்மப் பரிசோதனை செய்ய வைக்கின்றன, நியுயார்க் கர்தினால்


நவ.27,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள், மனச்சான்றைப் பரிசோதனை செய்வதாகவும், மனதில் ஆழப்பதித்து தியானிக்கவேண்டியவைகளாகவும் உள்ளன என, அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன் கருத்து தெரிவித்தார்.
Yonkersலுள்ள புனித வளன் குருத்துவ கல்லூரியில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த கர்தினால் டோலன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்று என்ன போதித்தார் என்ற ஆவலுடன், ஏறக்குறைய ஒவ்வொரு நாள் காலையிலும் தான் கண்விழிப்பதாகத் தெரிவித்தார்.
நம்பிக்கை ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய கர்தினால் டோலன், அண்மைக் காலத்து மூன்று திருத்தந்தையரும், கிறிஸ்துவின் மறையுடலின் ஆன்மா, மனது மற்றும் இதயத்துக்கு எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றனர் என்றும் கூறினார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.