நவ.25,2013. இத்திஙகள் காலை பரகுவாய் அரசுத்தலைவர் Horacio Manuel Cartes Jara அவர்கள்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். திருத்தந்தையுடனான
சந்திப்பிற்குப்பின்னர், திருப்பீடச்செயலர் பேராயர் பியேத்ரோ பரோலின், நாடுகளுக்கிடையேயான
உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்து
பேச்சுவார்த்தைகள் நடத்தினார் பரகுவாய் அரசுத்தலைவர். இச்சந்திப்பின்போது, இருநாடுகளுக்கிடையேயான
உறவு, பரகுவாய் நாட்டின் தலத்திருஅவையின் சமூகப்பணி, மனிதகுலமேம்பாடு, மனித உரிமைகளை
மதித்தல் போன்றவற்றில் பங்களிப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக திருப்பீடப் பத்திரிகை
அலுவலகம் அறிவித்தது.