நவ.,25,2013. பிறரன்புடன் வாழ்வது என்பது, நம் சுயநலன்களுக்காக வாழ்வதாகாது, மாறாக நம்மிடையே
காணப்படும் ஏழைகள் மீதான மற்றும் பலவீனமானோரின் சுமைகளைச் சுமப்பதாகும் என இத்திங்களன்று
தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏறத்தாழ ஒவ்வொரு
நாளும் ஒன்பது மொழிகளில் குறுஞ்செய்திகளை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்
திருத்தந்தை பிரான்சிஸ்.