2013-11-25 16:13:46

தமிழ்நாட்டில் பாலியல் கொடுமையில் 3 ல் 1 பெண் குழந்தை


நவ.,25,2013. தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பெண் குழந்தையும், ஐந்தில் ஒரு ஆண்குழந்தையும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என எடுத்துரைத்தார் உளவியல் ஆலோசகர் இரத்னா ராபின்சன்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புப் பணியில், சமுதாயத்தின் பங்கு குறித்து தூத்துக்குடி நாசரேத் கிறிஸ்தவ சபை ஆயர் ஜெபசந்திரன் கன்னியாகுமரியில் துவக்கி வைத்த தேசிய அளவிலான கருத்தரங்கில் பேசிய உளவியல் ஆலோசகர் இரத்னா ராபின்சன், இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்ற கவலையை வெளியிட்டார்.
இது போன்ற செயல்கள் பள்ளிகள், வீடுகளில் அதிகம் நடக்கின்றன என்ற அவர், குழந்தைகளுக்கு மிக நெருக்கமானவர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் எனவும் கூறினார்.

ஆதாரம் : Dinamalar








All the contents on this site are copyrighted ©.