2013-11-23 15:51:58

குட்மார்னிங் வணக்கத்துக்குப் பதில் ஜெய் ஹிந்த்


நவ.23,2013. ஆங்கிலேயர்கள் சொல்லிக்கொடுத்த 'குட்மார்னிங்' என்ற காலை வணக்கத்தைச் சொல்வதற்குப் பதிலாக, ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என இராணுவத்தினர் அனைவருக்கும், இராணுவத் தளபதி பைக்ராம்சிங் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இராணுவத்தில் படைவீரர்கள் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் குட்மார்னிங் சொல்வதற்குப் பதிலாக, ஜெய்ஹிந்த் எனச் சொல்லி ஒருவரை ஒருவர் மரியாதை செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
சுதந்திரப் போராட்டக் கால முழக்கத்தின்போது இந்தியர்களை உணர்ச்சி பொங்க வைத்த வாசகம்தான் 'ஜெய் ஹிந்த்'. உள்ளத்தின் ஆழ்மனதில் இருந்து வெள்ளையர்கள் எதிர்ப்புக் குரலாக எழுந்த இந்தக் கோஷம் அனைவருக்கும் ஓர் உற்சாகம் தந்தது. அதேநேரத்தில் ஆங்கிலேயரை அச்சமடையவும் செய்தது.
எந்தவொரு பணி துவங்கும்போதும் 'ஜெய் ஹிந்த்' என்று சொல்லிக் கொள்ள வேண்டும், இதேபோல் எந்தவொரு பணி முடியும்போதும் பாரத் மாதாக்கி ஜெ என்று சொல்லிக்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது போன்று நாம் உச்சரிக்கும்போது ஒருவருக்கொருவர் இடையேயுள்ள கருத்து வேறுபாடுகள் மறைந்து மதச்சார்பின்மை உருவாகும் மற்றும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும் என தளபதி தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.