2013-11-21 15:18:24

திருத்தந்தை : 'புனிதர்களாக வாழ்வது என்பது அனைவருக்குமான இறைவனின் அழைப்பு'


நவ.,21,2013. 'புனிதர்களாக வாழ்வது என்பது ஒருசிலருக்கு மட்டும் வழங்கப்படும் சலுகை அல்ல, அது அனைவருக்குமான இறைவனின் அழைப்பு' என தன் இவ்வியாழன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் தன் டுவிட்டர் பக்கத்தில் சிந்தனையைத் தூண்டும் குறுஞ்செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நாம் ஒவ்வொருவரும் புனித வாழ்வை மேற்கொள்வதற்கான அழைப்பை பெற்றுள்ளது குறித்து இவ்வியாழனன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.