நவ.19,2013. தொழிலாளர் நலன், குறிப்பாக, குடியேற்றதாரர் நலன் குறித்த விவகாரம் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுடன் இத்திங்களன்று வத்திக்கானில் இடம்பெற்ற சந்திப்பில் பேசப்பட்டதாகத்
தெரிவித்தார் ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனத் தலைவர் Guy Ryder. இச்சந்திப்பு
குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த Ryder, அனைத்துலக தொழில் நிறுவனத்தோடு
திருஅவை இணைந்து செயலாற்றும் மற்ற விவகாரங்களும் இச்சந்திப்பில் பேசப்பட்டதாகத் தெரிவித்தார். திருத்தந்தையும்,
திருஅவையும் கரிசனை காட்டும் இன்றைய உலகு முன்வைக்கும் வேலையின் மாண்பு மற்றும் அதன்
சவால்கள் குறித்தும், மனித வியாபாரம் குறித்தும், லாம்பெதுசா குடியேற்றதாரர் குறித்தும்
திருத்தந்தை எடுத்துரைத்ததாக ILO தலைவர் மேலும் கூறினார்.