நவ.,18,2013. இத்திங்களன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து
உரையாடினார் Bahamas பிரதமர் Perry Gladstone Christie. திருத்தந்தையுடனான உரையாடலுக்குப்பின்
புதிய திருப்பீடத்தலைவர் பேராயர் Pietro Parolin, நாடுகளிடையேயான உறவுகளுக்கான செயலர்
பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் Bahamas பிரதமர். இச்சந்திப்பின்போது,
குடியேற்றதாரர் பிரச்சனையும், Bahamas மக்களுக்கு, சமூக அளவிலும் கல்வித்துறையிலும் தலத்திருஅவை
ஆற்றிவரும் உதவிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக திருப்பீடப் பத்திரிகைத்துறை வெளியிட்ட
செய்தி கூறுகிறது.