2013-11-15 15:28:21

மியான்மார் நாட்டில் மேலும் 69 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு


நவ.15,2013. மியான்மார் நாடு 69 அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளித்து இவ்வெள்ளியன்று விடுதலை செய்துள்ளது.
எஞ்சியுள்ள அரசியல் கைதிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் விடுவிக்க அரசு தீர்மானித்திருப்பதாக, அரசுத்தலைவர் அலுவலகப் பேச்சாளர் Ye Htut முகநூலில் செய்தி வெளியிட்டுள்ளார்.
தற்போதைய விடுதலையின்மூலம் அந்நாட்டுச் சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளில் முதன்முறையாக நூற்றுக்கும் குறைவாக இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
2011ம் ஆண்டிலிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளது மியான்மார் அரசு.
இவ்வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளில், முன்னாள் சர்வாதிகாரி Ne Winனின் 2 பேரன்களும் உள்ளடங்குவர்.

ஆதாரம் : AP







All the contents on this site are copyrighted ©.