பாகிஸ்தான் லாகூர் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர்
நவ.14,2013. பாகிஸ்தானின் லாகூர் உயர்மறைமாவட்டத்தின் துணைஆயர் Sebastian Francis Shawவை
அவ்வுயர்மறைமாவட்டத்தின் பேராயராகஇவ்வியாழனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். பாகிஸ்தானின்
முன்னாள் பேராயர் Lawrence John Saldanha, 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி பணி ஓய்வு
பெற்றதைத்தொடர்ந்து தற்போது அவ்வுயர்மறைமாவட்டத்தின் துணைஆயரையே பேராயராக நியமித்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். புதிய பேராயர் Francis Shaw 1957ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி
பிறந்து, பிரான்சிஸ்கன் துறவுசபையில் 1991ம் ஆண்டு குருவாகவும், 2009ம் ஆண்டு லாகூர்
உயர்மறைமாவட்ட துணைஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.