பிலிப்பீன்சில் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் செபங்கள் மற்றும் மனிதாபிமான
உதவிகளில் தாராளம் காட்டுவோம், திருத்தந்தை பிரான்சிஸ்
நவ.12,2013. பிலிப்பீன்சில் ஹையான் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் செபங்கள்
மற்றும் மனிதாபிமான உதவிகளில் தாராள மனம் கொண்டவர்களாய் இருங்கள் என, இத்திங்களன்று தனது
டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஹையான் கடும் புயலால்
பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ், வியட்னாம் மற்றும் பிற பகுதி மக்களை நினைவு கூருவோம்
எனவும் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கடவுள் நம்மை அன்பு கூருகிறார், அன்பு கூருவது
மற்றும் அன்பு கூரப்படுவதன் அழகை நாம் கண்டுபிடிப்போம் எனவும் மற்றொரு செய்தியை எழுதியுள்ளார். மேலும்,
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவுத் துறைத் தலைவர் பேராயர் ஹிலாரியோன் அவர்களை இச்செவ்வாய்க்கிழமையன்று
திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.