2013-11-12 15:53:00

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறைத் தலைமைப் பணியை ஏற்றதற்குப் பின், ஆலயங்களுக்குச் செல்லும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரிப்பு, புதிய ஆய்வு


நவ.12,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறைத் தலைமைப் பணியை ஏற்றதற்குப் பின், இத்தாலியிலும் பிரித்தானியாவிலும் ஆலயங்களுக்குச் செல்லும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கூறுகின்றனர்.
இத்தாலியில் 51 விழுக்காடு மற்றும் பிரித்தானியாவில் 65 விழுக்காடு அருள்பணியாளர்களிடம், Cesnur என்ற இத்தாலிய புதிய மதங்கள் மையம் நடத்திய ஆய்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறைத் தலைமைப் பணியைத் தொடங்கியதற்குப் பின், பல்லாயிரக்கணக்கான மக்கள் கத்தோலிக்க விசுவாசத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிகிறது.
பிரித்தானியாவில் 22 பேராலயங்களுக்கு வரும் விசுவாசிகளிடமும் எடுக்கப்பட்ட ஆய்வில், ஆலயங்களுக்கு வருகின்ற கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக 65 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : The guardian








All the contents on this site are copyrighted ©.