இந்தியாவில் 62 கோடிக்கு மேற்பட்ட மக்கள் திறந்த வெளிகளில் தங்களைச் சுத்தம் செய்கின்றனர்
நவ.12,2013. இந்திய மக்கள் தொகையில் அதிகம் பேர் திறந்த வெளிகளில் தங்களைச் சுத்தம் செய்வதால்
ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஐ.நாவின் குழந்தைநல
அமைப்பான யுனிசெப் புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது. புதுடெல்லி, புனே, ஹைதராபாத்,
மும்பை ஆகிய நகரங்களில், முகநூல், டுவிட்டர், யுடியூப் போன்ற சமூகவலைத்தளங்கள் மூலம்
இம்முயற்சியில் இறங்கியுள்ள யுனிசெப் நிறுவனம், இந்நடவடிக்கையை இளையோர் மூலம் செய்யத்
திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 62 கோடிக்கு மேற்பட்ட மக்கள் திறந்த வெளிகளில் தங்களைச்
சுத்தம் செய்கின்றனர் என்றுரைக்கும் யுனிசெப் நிறுவனம், கழிவறைகளைப் பயன்படுத்துவோர்
மற்றும் திறந்த வெளிகளில் தங்களைச் சுத்தம் செய்வோரின் எண்ணிக்கை, கடந்த இருபது ஆண்டுகளில்
பெருமளவில் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய
2 கோடிப் பேர் கழிவறைகளைப் பயன்படுத்த்த் தொடங்கியுள்ளனர்.