பிலிப்பீன்ஸில் பெரும்புயலால் பாதிக்கப்பட்டமக்களுக்கு இத்தாலியஆயர் பேரவை உதவி
நவ.11,2013. பிலிப்பீன்ஸில் பெரும்புயலால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவவேண்டும் என்றதிருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து, அந்நாட்டின் துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கென,
முதல் தவணையாக30இலட்சம் யூரோக்களை அனுப்பியுள்ளது இத்தாலியஆயர் பேரவை. பிலிப்பீன்ஸில்
பாதிக்கப்பட்டுள்ளமக்களுக்கு உதவிகளை ஆற்றவேண்டும் எனவிண்ணப்பித்துள்ளஇத்தாலியகத்தோலிக்ககாரித்தாஸ்
அமைப்பு, அண்மையில் பிலிப்பீன்ஸைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ளவியட்நாம் மற்றும்
லாவோஸ் நாடுகளுக்கும் என ஒரு இலட்சம் டாலர்களை அனுப்பியுள்ளது. இத்தாலியில் வாழும்
பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்களும் தங்கள் நாட்டு மக்களுடன் செபம் மற்றும் ஒருமைப்பாட்டு
உணர்வுகளை வெளியிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இத்தாலியில் ஒன்றரை இலட்சத்திற்கும்
மேற்பட்ட பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.