செயற்கையான குரல்வளையை உருவாக்கி ஜப்பான் அறிவியலாளர்கள் சாதனை
நவ.09,2013. மனிதர் பேசும்போது குரல்வளையிலுள்ள குரல் நாண்கள் அதிர்வதன் மூலம் ஒலி பிறப்பிக்கப்படுவது
யாவரும் அறிந்ததே. இந்த இயற்கையின் விந்தையை தற்போது செயற்கையாக நிகழ்த்திக் காட்டியுள்ளனர்
ஜப்பான் அறிவியலாளர்கள். அதாவது மனிதரின் குரல் வளைக்கு ஒத்த செயற்கையான குரல்வளையினை
இவர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் குரல்வளையிலிருந்து எவ்வாறு ஒலி பிறப்பிக்கப்படுகின்றது
என்பதை துல்லியமாக விவரிக்க இயலுவது குறிப்பிடத்தக்கது.