2013-11-07 16:14:07

வத்திக்கான் மற்றும் Ciad நாட்டிடையே புதிய ஒப்பந்தம்


நவ.,07,2013. நீதியும் அமைதியும் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் வத்திக்கான் மற்றும் Ciad நாட்டின் ஒத்துழைப்பை வலியுறுத்தும் விதமாக இருநாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கிடையேயான பழைய ஒப்பந்தத்தில் திருத்தங்கள் கொணர்ந்து கையெழுத்திடப்பட்டுள்ள இப்புதிய ஒப்பந்தம், Ciad தலத்திருஅவையின் அதிகார வரம்பு, அதன் திருஅவைக் கட்டிடங்கள், இரு நாடுகளுக்கிடையேயான உறவு போன்றவைகளையும் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
திருப்பீடத்தின் சார்பில் Ciad நாட்டிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் Jude Thaddeus Okoloவும் Ciad நாட்டின் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Moussa Faki Mahamatம் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.