சிரியா அகதிகளுக்கு இணையதளம் மூலம் உயர்கல்வி, JRS திட்டம்
நவ.07,2013. ஜோர்டனில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா அகதிகள் வாழும் நிலையில்,
அவர்களுக்கான உயர்கல்வியை இணையதளம் மூலம் வழங்கத் திட்டமிட்டுள்ளது இயேசு சபை. கடந்த
ஜூலை மாதம் துவக்கப்பட்ட இந்த இணையதள உயர்கல்வித் திட்டம் குடியேற்றதாரர்களிடையே பெரும்
ஆதரவைப் பெற்றுள்ளதாக இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பான JRS அறிவித்துள்ளது. அமெரிக்க
ஐக்கிய நாட்டின் கொலராடோவிலிருந்து இயங்கும் ரேஜிஸ் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள
இந்த உயர்கல்வித் திட்டத்தில் சுற்றுலாத்துறை, சட்டம், நலவாழ்வுக் கல்வி, சமூகப்பணி போன்றவைகளுக்கான
படிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. போரால் தங்கள் கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும்
மாணவர்களுக்கு இது ஒரு பெரும் கொடையாக நோக்கப்படுகிறது.