இலங்கையில் காவல்துறையின் சித்ரவதைகள் தொடர்கின்றன, ஆசிய மனித உரிமை ஆணைக்குழு
நவ.06,2013. இலங்கையில் காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சித்ரவதைகள் தொடர்ந்து
இடம்பெற்று வருவதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டம்
Bandaragama காவல் நிலையத்தில் 27 வயதான D.A. Ruwan Kumara என்ற கைதி சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக
அவரது மனைவி புகார் செய்துள்ளார். காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரின்
மனைவி Chinthini Nadeesaவும், Ruwan Kumaraவின் சகோதரரும் காவல் நிலையத்தில் அவரைப் பார்வையிட
சென்றிருந்த போது காவல் நிலையத்திற்குப் பின்னால் வைத்து சில காவல்துறையினர் Ruwan Kumaraவை
அடித்து சித்திரவதை செய்து கொண்டிருந்ததாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது
பற்றி அவரது மனைவி தொலைபேசி ஊடாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் காவல்துறை தலைவருக்கு
புகார் செய்தார். எனினும் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என்பதுடன் அவரது கணவர் தொடர்ந்தும்
சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். இதனைத் தடுத்து நிறுத்த அவர் பொதுமக்களின் உதவியையும்
கோரியுள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.