மறைபோதகர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி
நவ.04,2013. இறைவனுக்கும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கும் அமைதியாக, அதேவேளை, கடினமாக உழைக்கும்
ஆண் பெண் மறைபோதகர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தன் டுவிட்டர்
பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இதே நாளில் திருப்பீடச்செயலகமும்,
ஏழ்மையின் அனைத்து வடிவங்களைப்போல், பசியும் முன்னேற்றத் திட்டஙகளிலிருந்து மக்களைப்
புறந்தள்ளிவைப்பதால் உருவாகிறது. முன்னேற்றத் திட்டங்களில் மக்களையும் உள்ளடக்குவதை ஊக்குவிப்பது
ஏழ்மையை ஒழிக்க உதவும் என ஐ.நாவிற்கான திருப்பீட நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ்
சுள்ளிக்காட், ஐ.நா. அவையில் உரைத்ததை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.