அக்.31,2013 கற்றனைத்தூறும் ... நோயுற்றிருக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
இனிப்புகள் : உடல்நலம் குன்றி இருக்கும் காலத்தில் கண்டிப்பாக சாக்லெட் அல்லது பிஸ்கட்களை
அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் இனிப்புகளில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. இது செரிமான
அமைப்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும். உப்புக்கண்டம் : உப்புக்கண்டம் செய்யப்பட்ட இறைச்சியில்
உள்ள நைட்ரேட்ஸ் நைட்ரைட்ஸாக மாறிவிடும். இது புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
மேலும், நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில்
இந்த நைட்ரைட்ஸின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆரஞ்சு பழச்சாறு : உடல்நலத்தைப் புதுப்பிக்க
ஆரஞ்சுப்பழச்சாறு பெரிதும் உதவுகிறது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆரஞ்சு பழத்தில்
வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் நுண் ஊட்டப்பொருள் இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும்
இல்லை.ஆனால் அதனை பழச்சாறாக மாற்றும்போது, சோடாவைப்போல அதிலும் அதிக அளவில் சர்க்கரை
வந்துவிடுகிறது என்று அண்மை ஆய்வுகள் கூறுகின்றன. நோய்வாய் பட்டிருக்கும் போது இனிப்புகளைப்
போல, சர்க்கரையையும் தவிர்க்க வேண்டும். மேலும், இந்நேரத்தில் ஆரஞ்சில் உள்ள அமிலமும்
வயிற்றைப் பாதிக்கலாம். கொட்டை வகைகள் : நோய்வாய்பபட்டிருக்கும்போது பல வகையான கொட்டைகளையும்,
காரமான உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வேர்க்கடலைப் பருப்புகள் அளவுக்கு
அதிகமான சளியை உண்டாக்கிவிடும். மாட்டிறைச்சி : கொட்டைகளைப் போலவே மாட்டிறைச்சியும்
உடலைப் பாதிக்கும். மேலும், மாட்டிறைச்சியில் கெட்டியான கொழுப்பு இருப்பதால், அதனைக்
கரைத்து செரிமானம் செய்வதற்கு, உடல் சிரமப்படும். உடல்நலம் சரியில்லாதபோது, உடல் ஏற்கனவே
கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும். இந்நேரத்தில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். மதுபானம்
: மதுபானம் என்பது வேதிய மூளைத்திறன் குறைப்பு மருந்து. அதனால் நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிக்க, உண்ணும் அனைத்து மருந்தையும் செயலிழக்கச் செய்துவிடும். மேலும், பல மதுபானங்கள்
அமிலத்தன்மை கொண்டவை. இவை வயிற்றையும் பாதிப்படையச் செய்யும். பச்சை உணவுகள் : காய்கறிகளை
பச்சையாக எடுத்துக்கொண்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். இதனால் நுண்கிருமிகள் தொற்றுக்கள்
ஏற்படும். பால் பொருட்கள் : பால் சம்பந்தப்பட்ட பொருட்களில்தான் அதிக அளவிலான கொழுப்பு
உள்ளது. அதனால் அவை செரிமானத்திற்கு கஷ்டத்தைத் தருவதோடு நிற்காமல், நோய்வாய்ப்பட்டிருக்கும்
சிலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்திவிடும்.